Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விஷன் செய்தி எதிரொலி- விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி பொதுமக்கள் மகிழ்ச்சி

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்பொழுது நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக பதவி வைத்து வருகிறார்.

இந்த மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம், பெரிய மிளகு பாறை பகுதியில் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சாலை மற்றும் சாக்கடை பிரச்சனைகள் மிக நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வருகிறது.

இது குறித்து வார்டுக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் கண்டும் காணாதது போல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது மாநகராட்சி வார்டுக்குட்பட்ட 54 வது வார்டு செல்வ நகரில் நீண்ட காலமாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது.

விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வந்த வாய்க்கால் தற்பொழுது சாக்கடையாக மாறி உள்ளது. இதில் சாக்கடை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை நீர் குடியிருப்புக்குள் செல்லும் நிலை உள்ளது. இந்த சாக்கடை 54 மற்றும் 55 வது வார்டு நடுவில் உள்ளதால் இரண்டு கவுன்சிலர்களிடம் இது குறித்த புகார் தெரிவித்தால் இது என்னுடைய கட்டுப்பாட்டில் வராது என்று அலட்சியம் காட்டி வந்தனர்.

மழை காலங்களில் சாக்கடை நீர் ஆறு போல தெருக்களில் செல்வதால் விஷ பூச்சிகள், தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடல் நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நேற்று திருச்சி விஷன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலியாக இன்று மாநகராட்சி உடனடியாக அந்த வாய்க்காலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகராட்சிக்கும், திருச்சி விஷன் செய்திதளத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *