Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மூவர்ணத்தில் ஒளிரும் கோட்டை வாசல்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த 150 நினைவுச் சின்னங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்டல கட்டுப்பாட்டிலுள்ள திருச்சி கோட்டை நுழைவாயில், திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, வட்டக்கோட்டை ஆகிய 4 இடங்களிலும், என தமிழகத்தின் 9 கோட்டைகளில் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கோட்டைகளை பார்வையாளர்கள் கட்டணம் என்று சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர ஒவ்வொரு கோட்டை முகப்பிலும் தலா 15 மீட்டர் உயரத்தில் தேசியக்கொடி பறக்க விடுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இக்கோட்டை சுவர்களை தேசிய கொடியில் உள்ள சிகப்பு, வெள்ளை, பச்சை ஆகிய வர்ணங்கள் உடைய விளக்குகளால் ஜொலிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த கோட்டை முன்பு தேசியக்கொடி வண்ணங்களிலான மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளதை பொதுமக்கள் இதன் முன்பு நின்று செல்பி எடுத்து செல்கின்றனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *