Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தள்ளுவண்டி, தரைக்கடை தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்த கூடாது. 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி போடப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது.

பல ஆண்டு காலமாக தரைக் கடை நடத்துபவர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் மாநகராட்சி அணையரை சந்தித்து 450 க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *