திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க.தலைவர் விஜய் போட்டியிட்டு வென்று தமது அரசியல் கணக்கை துவக்க வேண்டுமென விஜய் மன்ற முதல் மாவட்ட தலைவரும் அவரது தீவிர விசுவாசியுமான ஆர்.கே .ராஜா விரும்பினார்.
இதற்கான முயற்சியின் முதல் கட்டமாக த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமென (ரூ.10.000 DD) விருப்ப மனு பெற்று அக்கட்சி தலையிடம் வழங்கினார்.

தற்போது விஜய் திருச்சி கிழக்கு தொகுதியிலும் பெரம்பூரிலும் போடியிடுவதாக அறிவிப்பு வந்ததையொட்டி
ஆர்.கே.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்
அப்போது அவர் கூறுகையில்….
த.வெ.க.தலைவர் தளபதி விஜய் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அறிவிப்பின் மூலமே தமது வெற்றிக்கணக்கை துவக்கிவிட்டார்.

பொதுமக்கள்- ரசிகர்கள்- இளைஞர் இளம்பெண்கள்- மாணவ மாணவியரின் அமோக ஆதரவை பெற்ற தலைவர் விஜய்க்கு முழு மூச்சாக பிரச்சாரம் செய்து வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் என்றார்
விஜய் ரசிகர் மன்ற முதல் மாவட்ட தலைவரும், இத்தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டுமென முதல் விருப்பமனு கொடுத்தவரும் ஆர்.கே.ராஜா என்பது குற்ப்பிடத்தக்கது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments