Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சிக்கு கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

திருச்சி ராம்ஜி நகர் அருகே காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது வெளிமாவட்ட பதிவு எண் கொண்ட காரை சோதனை செய்த போது 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரில் வந்த இருவரைிடம் நடத்தியதில் திருப்பத்தூர் அண்ணாநகர் பொம்மி குப்பத்தை சேர்ந்த சேர்ந்த மாது (65), முருகன் (43) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் அதிரடியாக கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் உள்ள யாருக்கும் இந்த கஞ்சாவை வழங்க வந்தார்களா? இவளுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்கிற கோணத்தில் ராம்ஜிநகர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சியில் ராம்ஜி நகர் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகம் விற்பனை செய்யும் இடமாகவே உள்ளது. தொடர்ந்து இந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இதனை தடுப்பதற்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து தனிப்படை போலீசார் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *