Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் திமுக கவுன்சிலரின் துப்பாக்கியை திருடிய 2பேருக்கு சிறைவாசம்

திருச்சியில் திமுக கவுன்சிலரின் துப்பாக்கியை திருடிய 2பேருக்கு சிறைவாசம்.திருச்சியில் மத்திய பேருந்துநிலையம் அருகே தமிழ்நாடு ஹோட்டலில் நகராட்சி நிர்வாக துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில், டெல்டா மாவட்டங்களின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 20- வது வார்டு திமுக கவுன்சிலர் சங்கர் என்பவர் தனது கை துப்பாக்கியுடன் பங்கேற்றார்.கழிப்பறைக்கு சென்று திரும்பி போது கவுன்சிலரது கைது துப்பாக்கி களவு போனது.இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் ஐந்து பேரிடம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.ஹோட்டல் ஊழியர் ஒருவர், துப்பாக்கியை திருடி, தனது துணிப்பைக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.துப்பாக்கியை திருடிய ஊழியர்கள் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ணன், நாராயணன் சவுத்ரி என்பது விசாரனையில் தெரிய வந்தது.

இருவரையும் கன்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் யாஸ்மின் பானு ஆய்வாளர் உள்ளிட்டோர் கைது செய்து துப்பாக்கியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் இரண்டில் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *