Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 12.04.22-ந்தேதி EB ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் சம்மந்தப்பட்ட வீட்டை சோதனை செய்தபோது எதிரிகள் கதிர்வேல் வயது 33, மற்றும் ராணி வயது 51 க.பெ.முத்துசாமி ஆகியோர்கள் 4 இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே எதிரிகளை கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு. எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே. மேற்படி எதிரிகள் கதிர்வேல் மற்றும் ராணி ஆகியோர்கள் தொடர்ந்து இளம்பெண்களின் வறுமையை பயன்படுத்தி விபசாரத்தில் ஈடுப்படுத்துவர்கள். சமூக விரோதசெயல்கள் புரிபவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுபர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டனார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற இளம்பெண்களை விபசார தொழில் ஈடுப்படுத்தும் குற்றவாளிகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் புரியும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *