Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

ஸ்ரீரங்கம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள், வணிக கடைகள் பாதிப்பு – புலம்பல்

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக சிறு வணிக நிறுவன கடைகள், ஹோட்டல்கள், பத்திர பதிவு அலுவலக தேவையான ஆவணங்கள் தயார் செய்யும் கடைகளும் உள்ளது. இன்று காலை முதல் திடீரென எந்தவித அறிவிப்புமின்றி மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மின்விநியோகம் வழங்கப்படவில்லை. மின்மாற்றியில் ஏறி மின்சார ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். முன்னறிவிப்பு கொடுத்திருந்தால் சிறு நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பணிகள் அனைத்தையும் வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம், ஒத்தி வைத்திருக்கலாம்.

முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படுத்தியதால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டதாக ராஜகோபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் புலம்புகின்றனர். இனிவரும் காலங்களில் மின்சார வாரியம் முன்னறிவிப்புடன் பராமரிப்பு மற்றும் அனைத்து பணிகளையும் மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *