Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொதுஏலம்

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை இன்று 13.04.22-ஆம் தேதி திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், தலைமையில் காவல் துணை ஆணையர் தெற்கு மற்றும் கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 13 இரண்டு சக்கர வாகனங்கள், ஒரு டெம்போ டிராவலர், 2 ஜீப்புகள் (பொலிரோ & MM540) ஆக மொத்தம் 16 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது. பின்னர், பொது ஏலத்தில் விடப்பட்ட வாகனங்களின் மொத்த விற்பனை தொகையான ரூ.3,39,080 (GST வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை விருப்பமுள்ளவர்கள் பொது ஏலத்தில் எடுத்துக்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *