Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் வாஸ்குலர் அறுவை சிகிச்சை மையம்

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் வாஸ்குலர் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் வனிதா, அரசு மருத்துவமனையில் வாஸ்குலர் சர்ஜரி OPD -ஐ துவக்கி வைத்தார்.

இதுவரை வாஸ்குலர் அறுவை சிகிச்சை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மதுரை, தஞ்சாவூர் மற்றும் சென்னையில் உள்ள உயர் மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியது. இந்த திருச்சியிலேயே சிகிச்சை அளிக்கப்படும்.

வாஸ்குலர் அறுவை சிகிச்சை OPD புதிய கட்டிடம் இரண்டாவது மாடியில் (அறை எண் 205) அமைந்துள்ளது மற்றும் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையும் காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படும். இங்கு நோயாளிகளின் சுருள் சிரை நாளங்கள், புற தமனி த்ரோம்போசிஸ், ஹீமோடையாலிசிஸ், அணுகலுக்கான நீண்டகால சிறுநீரக நோய், தமனி அனீரிசிம் வாஸ்குலர் குறைபாடு. லிம்பெடிமா மற்றும் வாஸ்குலர் சார்ந்த பிற நோய் சிகிச்சைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உயர்தர சிகிச்சையை இலவசமாகப் பெறலாம்.

மேலும் வாஸ்குலர் சார்ந்த பிரச்சனைகளுக்கு அவசர நிலைகள் 24*7 அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். எனவே திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *