Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தீபாவளி போனஸ் வழங்க கோரி சுங்கச்சாவடியில் காத்திருப்பு போராட்டம்

திருச்சி அருகே உள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (AITUC) மற்றும் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் கூட்டமைப்பு (AITUC)-யில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறோம்.

தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி (11.07.2024) அன்று தொழிற்சங்கம் சார்பாக Chabbras Associates என்ற நிறுவனத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் நிர்வாகம் செவி சாய்க்காததால் ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்து (02.10.2024) அன்றும் நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு முறையிட்டோம்.

மேலும் பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் இதுநாள் வரையிலும் நிர்வாகம் செவி சாய்க்காததால் தொழிலாளர்களுக்கு போனஸ் சட்டம் 1965ன்படி சட்ட ரீதியான நியாயமாக கிடைக்க வேண்டிய 75 நாள் ஊதியத்தை தீபாவளி போனசாக பெற்று தருமாறு தொழிற்சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைக்கும் வரை (26.10.2024) காலை 8:00 மணி முதல் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் தொழிற்சங்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அனைத்து தொழிலாளர்களும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ் சம்பந்தமாக நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு உடன்படாத காரணத்தால் காத்திருப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *