Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் அரசே ஏற்று தள்ளுபடி அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி பல்நோக்கு சமூக பணி மையம், சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மகளிர் தின விழா, மஞ்சள் பை விழிப்புணர்வு விழா, மரக்கன்று வழங்கும் விழா, பணி ஓய்வு பணியாளர்கள் பாராட்டு விழா மற்றும் சேம நல நிதி வழங்கும் விழா இன்று ஆர்.சி பள்ளியில் நடைபெற்றது.

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பு பேச்சாளராக இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், TMSSS இன் தொற்று நோய் விழிப்புணர்வு தூதுவரும் நடிகையுமான கஸ்தூரி கலந்து கொண்டனர்.

இதில் நகர்ப்புற வளச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசிய போது… “மகளிர் சுயஉதவி குழுவை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் துவக்கி வைத்தார். தற்போதய முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். இன்னும் 2 நாட்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடனை அரசே ஏற்று  தள்ளுபடி செய்ய இருக்கிறது. மேலும் விவசாய கடன் தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி கல்விக் கடன் தள்ளுபடி ஆகிய செய்து வருகிறார் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *