Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டாஸ்மாக் பார் ஏலம் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்ட டாஸ்மார்க் (பொ) மேலாளர் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது…… திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 161 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 105 மதுப்பான கடைகள் பார்களுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 51 மதுப்பான கடைகளுடன் இணைந்த பார்களுக்கு (மால் சாப் 5 தவிர்த்து ) இ டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.

அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த அக்டோபர் 27ம் தேதி மதியம் 2 மணிவரை https://tntenders.gov.in.nicgep/app என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம். என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கால நீட்டி பாக்க நவம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணி வரை வின்னப்பிக்கலாம் என காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக நவம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணி வரை காலத்தை நீட்டித்துள்ளதாக (பொ) பொது மேலாளர்  தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *