திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் வாலிபர் பலி மேலும் இரண்டு பேர் பலத்த காயம்அடைந்தனர்
நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் அன்புமணி இவரது மகன் அஜய் (19) இவரும் அவரது நண்பர் முகேஷ் (19) இருவரும் நவல்பட்டு அண்ணா நகர் பகுதிக்கு பைக்கில் சென்ற பொழுது நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த தன்ராஜ் மகன் மகேஸ்வரன் (24)
இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் அண்ணா நகரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று விட்டுமொபட்டில் வந்த பொழுது இரண்டு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது இதில் சம்பவ இடத்திலேயே அஜய் பரிதாபமாக உயிரிழந்த முகேஷ் மற்றும் மகேஷ்வரன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments