Site Logo mobile
Search Icon
Mobile Gif
Article

*திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு (19.07.2025 சனிக்கிழமை) நாளை காலை தீர்ப்பு*

திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோஅவர்கள் வருகை தந்தார்.அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர்.இதை மறுமலர்ச்சி திமுகவினர் தட்டிக் கேட்க முற்பட்டபோது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இருதரப்பினரின் மோதலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, இரு கட்சியினர் மீதும் விமான நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கு 2-ஆவது கூடுதல் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.கடந்த 7 வருடங்களாக நடந்த வழக்கு விசாரணையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்,அரசியல் ஆய்வு

மைய உறுப்பினர் *பெல் இரா.இராசமாணிக்கம்* மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் *ப.சுப்ரமணியன்*, முன்னாள் பகுதிச் செயலாளர் *பிரபாகரன்* ஆகியோர் வருகை தந்தனர்.

வழக்கில் மூத்த வழக்கறிஞர் டி.ஏ.ஓம்பிரகாஷ்,வழக்கறிஞர் ஷீலா ஆகியோர் நேர்நின்று விசாரணைக்கு உதவினார்கள்.வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், 19.07.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *