Site Logo mobile
Search Icon
Mobile Gif
Article

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வார்கள்.ஆனி மாதம் பௌர்ணமியை ஒட்டி இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று தங்க தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றும் விதமாக கோவில் உட்பிரகாரத்தில் தங்க தேரை இழுத்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைதரிசனம் செய்தனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *