Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் பேரறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு

பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்
மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் பேரறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, செப்டம்பர் 15, திங்கள் கிழமை, மாலை 3:00 மணிக்கு திருச்சி சிறுகனூர், பெரியார் திடலில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு கழக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் – நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்கள் தலைமை வைக்கிறார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சேக் முகமது கொடியேற்றுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா அவர்கள் பேரறிஞர் அண்ணா சுடரை ஏற்றி வைக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைக்கிறார். இந்த மாநாட்டில், திராவிட இயக்க வரலாற்று கண்காட்சியை வெல்லமண்டி சோமு அவர்கள் திறந்து வைக்கிறார்.

திராவிட இயக்க மூவர் படத்தினை ரோவர் கே.வரதராஜன் அவர்களும், தந்தை பெரியார் படத்தை பெரம்பலூர் செ.துரைராஜ் அவர்களும், பேரறிஞர் அண்ணா படத்தை புதுக்கோட்டை எஸ்.கே.கலியமூர்த்தி அவர்களும், மொழிப்போர் தியாகிகள் படத்தை மணவை தமிழ்மாணிக்கம் அவர்களும் திறந்து வைக்கிறார்கள்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி. சேரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்.

இந்த மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன் உள்ளிட்ட கழக முன்னணியினர் உரையாற்றுகின்றனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன் நன்றி கூறுகிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *