14 நாட்களில் 1 கோடியே 27 லட்சம் வசூல்

14 நாட்களில் 1 கோடியே 27 லட்சம் வசூல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று (26.04.2023) நடைபெற்றது. 

உண்டியல் திறப்பில், சி.கல்யாணி இணை ஆணையர் / செயல் அலுவலர், ஞானசேகரன். துணை ஆணையர் நகை சரிபார்ப்பு அலுவலர் (இரட்டை பூட்டு அலுவலர் கூடுதல் பொறுப்பு), இரமணிகாந்தன், உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, இரவிச்சந்திரன், உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில் சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர் திருக்கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ரொக்கம் ரூ.1,27,78,337, தங்கம் 2 கிலோ 110 கிராம், வெள்ளி 3 கிலோ 045 கிராம், 217 அயல்நாட்டு கரன்சி, 869 அயல்நாட்டு நாணயங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும் சித்திரை தேர் திருவிழா தற்காலிக உண்டியல் ரொக்க வரவு : 1,96,245/- இதற்கு முன் உண்டியல் திறக்கப்பட்ட நாள் - (12.04.2023).

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn