Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஒரு ஆண், பெண்ணிடமிருந்து ஒரு கிலோ 15 கிராம் தங்கம் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் கடத்தி வந்த 506 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தினை, சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 69 ஆயிரத்து 396 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இதே போல் அதே விமான நிலையத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் கடத்தி வந்த 509 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தினை, திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 87 ஆயிரத்து 594 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் வந்த ஆண், பெண் பயணிகளிடம் ஒரு கிலோ 15 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *