Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

1400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் – ஒருவர் கைது.

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம், அம்பிகாபுரம், மேலகல்கண்டார்கோட்டை,

கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், நத்தமாடிபட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து சுற்றிய வந்த போது ஆலத்தூர் பாலத்திலிருந்து மஞ்சத்திடல் செல்லும் சாலையில் இடதுபுறம் ஓரமாக நம்பர் பிளேட் இல்லாத டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் வண்டியில் இரண்டு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே முட்புதரில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளையும் சோதனை செய்தனர்.

அதில் 28 மூட்டைகளில் சுமார் 1400 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த நபரை கைது செய்து விசாரிக்க தனது பெயர் ராதாகிருஷ்ணன் (44) த/பெ. முருகன் 40 சுருளிகோவில் தெரு நவல்பட்டு ரோடு திருவெறும்பூர் திருச்சி என்றும், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, 

ஆலத்தூர் ஆகிய பகுதியில் இருந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு இரவுநேர டிபன் கடைகளுக்கு மற்றும் மாட்டு தீவனத்திற்கு விற்பதற்காகவும் கடத்தி வந்து மறைத்து வைத்திருந்து தெரியவந்ததால் வழக்கு சொத்துக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *