Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 16,726 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை இன்று (18.09.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், அவர்களால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் 16726 எண்ணிக்கையுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit – 8637, Control Unit – 3899 and VVPAT 4190) ஆய்வு செய்யப்பட்டது.
மேற்படி ஆய்வின் போது திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் திரு.அருள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.சாலை தவ வளன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *