Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 3 மாணவர்களை பாலியல் தொந்தரவு செய்த 2 பிரம்மச்சாரிகள் 2 பாதுகாவலர்கள் கைது

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண குடில் கடந்த 60 ஆண்டாக ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சேவை செய்து வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஒரு துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த ஸ்ரீராமகிருஷ்ண குடில் 250 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரும் பாதுகாவலராக மடத்தை நிர்வகிக்கும் நான்கு பேர் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் 3 மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்ரையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சமூக நலத்துறை அதிகாரிகளை நேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

சமூக நலத்துறை அதிகாரி நித்யா ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பிரம்மச்சாரிகள் தனசேகர், பார்த்திபன், பாதுகாவலர்கள் சிவகிரி, ஜேசுராஜ் ஆகிய நான்கு பேர் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததற்க்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆசிரமத்தில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியதில், அங்குள்ள மாணவர்களுக்கு பாதுகாவலர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து உறுதி செய்யப்பட்டது. பின்னர் மாணவர்கள் அளித்த புகாரில் உள்ள நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *