Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் கோவிலில் ஒரே வருடத்தில் 2 சொர்க்கவாசல் திறப்பு விழா -முகூர்த்தக்கால் நடும் வைபவம்

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிவிழாக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் இன்று காலை நடைபெற்றது.அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள், ஆலயத்தினரின் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். வைகுண்ட ஏகாதசியானது பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் விழாவில் டிசம்பர் 20ம் தேதி முதல் பகல்பத்து திருவிழா தொடங்கி 09.01.2026ம் தேதி வரையும் நடைபெறுவதுடன், டிசம்பர் 29ம் தேதியன்று மோகினி அலங்காரமும், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் விழா ஏற்பாட்டுகளை கோவில் ஊழியர்கள், அர்ச்சர்கள் செய்திருந்தனர்.
இந்த வருடத்தில் இரண்டாவது வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு. ஏற்கனவே இந்த வருடம் ஜனவரி மாதத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *