5 லட்சத்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கு 202 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது

5 லட்சத்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கு 202 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் நேற்று (30.09.2021)-ஆம் தேதி திருச்சி 
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணி, கலால் உதவி ஆணையர் ராமன், தானியங்கி பணிமனை பொறியாளர் மோ.எஸ்தர் வத்சலா, மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசு
ஆகியோர் முன்னிலையில் இரு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/-மும்,
நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10,000/-மும் முன்வைப்பு தொகையாக பெறப்பட்டு ஏலம் நடைபெற்றது.

இதில் 198 இரு சக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ரூபாய் 5,32,512 அரசு நிதியில் செலுத்தப்பட்டது என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தி அறிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn