Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி யாதவர் சங்கம் சார்பில் 21-வது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண வைபவம்: பஜனை, கோலாட்டம் ஆடி பக்தர்கள் வழிபாடு

திருச்சிராப்பள்ளி சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில் 21 வது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் இன்று ஸ்ரீ சப்பாணி சுவாமி கோவிலில் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணர் ராதா சமயவராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஸத்விருத்தி பஜனையும், திருச்சியைச் சேர்ந்த ரவி மற்றும் சங்கரன் பாகவதர் மற்றும் மும்பையைச் சேர்ந்த கணேஷ் பாகவதர் ஆகியோரின் தலைமையில் ராதா கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

திவ்ய நாம பஜனை திருமாங்கல்ய தாரணம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் ராதா சமேதராக திருமணக்கோலத்தில் எழுந்தருள பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று கோலாட்டம் ஆடி, பஜனைகள் பாடி வழிபாடு செய்தனர்.

முன்னதாக அஷ்டபதி பஜனை, நாம சங்கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, சங்கீத உடன்யாசம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் மஹோத்ஸவத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *