Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலையத்தில் மின் மோட்டாரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து வந்த சரக்கு விமானத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது தண்ணீர் மோட்டார் பம்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 23 லட்சம் மதிப்பிலான 463 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் இதனை பெறுவதற்கு யார் வருகிறார்கள் என கண்காணித்த அதிகாரிகள் பார்சல் பிரிவிற்கு வந்த அந்த பார்சலை கேட்ட தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இர்பான் (35)  என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *