Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ.248.59 கோடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் – அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடி ஊராட்சியில், லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில்    ரூபாய் 248.59 கோடி மதிப்பீட்டில் புதிய   கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 36.84 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்  இலால்குடி சட்டமன்ற உறுப்பினர்  சௌந்தர பாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் திரு. முரளி, கண்காணிப்பு பொறியாளர்  மாதவன், இலால்குடி  கோட்டாட்சியர்  வைத்தியநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் ரஸ்யா ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ரெட்டிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர்  தங்கவேல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

          

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *