3 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்.

3 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரும், திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கதுறையினரும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 8 பயணிகள் தங்களது உடலில் மறைத்து வைத்திருந்த 7 ஆயிரத்து 391 கிராம் எடையுள்ள 3 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரத்து 914 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனைை பறிமுதல் செய்த அதிகாரிகள் 8 பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu