Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் விமான நிலையத்தில் 3 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் .

திருச்சிக்கு விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் துபாயில் இருந்து வந்த விமானங்களில் ஆறுபேர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய்  நுண்ணறிவு பிரிவிற்கு தகவல் கிடைத்தது .அதன் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
தங்கத்தை பேஸ்ட் வடிவில் அவர்கள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து  மூன்று கோடியே 49 லட்சம் மதிப்புள்ள 7கிலோ 162 கிராம் தங்கம் பறிமுதல். ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஜீன் மாதம் (22,23) இரண்டு நாட்களில் திருச்சி விமான நிலையத்தில்  5 கோடி மதிப்புள்ள 
11கிலோ தங்கம்  11 பயணிகளிடமிருந்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல்  செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *