மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 3 நாட்கள் சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 3 நாட்கள் சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து 2022 ஏப்ரல் முதல் 2023 
மார்ச் வரை ஒரு வருட காலத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து இலவச பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. வருகின்ற 29.03.2022, 30.03.2022 மற்றும் 31.03.2022  ஆகிய மூன்று தினங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் அரங்கிற்கு பின்புறம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பார்வையற்றோர்கள், கை கால் பாதிக்கப்பட்டோர்கள், மனவளர்ச்சி 
குன்றியோர்கள் மற்றும் காது கேளாதோர் (ம) வாய் பேச இயலாதோர்கள் சிறப்பு 
முகாமினை பயன்படுத்தி தங்களது இலவச பேருந்து பயண அட்டையினை புதுப்பித்துக் கொள்ளலாம் மற்றும் புதிய அட்டை வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம். முகாமில் கலந்துக் கொள்ளும் பார்வையற்றோர்கள் இலவச பேருந்து பயண அட்டை பெறுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் -2, தனித்துவ அடையாள அட்டை (UDID) நகல் -2, தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு உள்ள புகைப்படம் -3 ம்

கை கால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர்கள் மற்றும் காது கேளாதோர் (ம) வாய் பேச இயலாதோர், கல்லூரி மற்றும் சிறப்பு பள்ளிகளுக்கு செல்வோர் கல்வி பயிலும் நிறுவனத்தில் கல்வி பயிலும் சான்று (Bonafide), சுயதொழில் செய்வோர் கிராம நிர்வாக அலுவலரிடம் பணிபுரிவதற்கான சான்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்திடம் பணிச் சான்று மற்றும் மருத்துவ சிகிச்சைகாக செல்பவர்கள் அரசு மருத்துவரிடம் சான்று பெற்றுவரவும். இச்சிறப்பு முகாமில் விண்ணப்பித்துடன் உடனடியாக இலவச பேருந்து பயண அட்டையினை புதுப்பித்து வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டையினை பெற்று 
பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO