காதல் திருமணத்தால் மனைவியின் அண்ணனை கொலை செய்த மைத்துனர் உள்பட 3 பேருக்கு ஆயுள்

காதல் திருமணத்தால் மனைவியின் அண்ணனை கொலை செய்த மைத்துனர் உள்பட 3 பேருக்கு ஆயுள்

திருச்சி லால்குடி அருகே உள்ள திருமங்கலம் மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருபன் ராஜ் (வயது 28)நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்ததாரரிடம் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். இவரது இளைய சகோதரி கிரிஜா.இவரை அதே பகுதியைச் சேர்ந்த கவியரசன் காதலித்து வந்தார். இந்த நிலையில் கிரிஜாவின் சகோதரர் திருபன் ராஜ் தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார். 

பின்னர் திருமணத்துக்கு மூன்று நாட்களுக்கு இருந்த நிலையில் அந்த பெண்ணை கடத்திச் சென்று கவியரசன் திருமணம் செய்து செய்துவிட்டார். இது தொடர்பான முன் விரோதத்தில் கிருபன் ராஜை, அவரது சகோதரி கணவர் கவியரசன் மற்றும் அவரது சகோதரர் கலைவாணன் மற்றும் அவரது நண்பர் நிவாஸ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் 25 4 2021 அன்று காலை நடந்தது. இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக கே.பி. சக்திவேல் வாதாடினார். இதில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். 

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.6500 அபராதமும் விதித்து நீதிபதி பி. சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision