Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

3 ஏழை ‘தங்கங்கள்’ – ஒலிம்பிக் இலக்கு – உற்சாக வரவேற்பு

இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் சார்பில் காஷ்மீரில் கடந்த 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை 3 நாட்கள் 4-வது ஒய்.எஸ்.பி.ஏ. தேசிய சாம்பியன் சிப் – 2024 தடகள போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 1200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு சார்பில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 3 வீரர்கள் தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதில் லால்குடி பகுதியை நேர்ந்த அவினேஷ்குமார் (20) 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் முதல் இடமும், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (20) 800 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் முதல் இடமும், சமயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (18) 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றனர்.

இதையடுத்து இவர்கள் இன்று திருச்சி ரெயில் நிலையத்தில் வருகை தந்தனர். அவர்களுக்கு பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து வீரர் அவினேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில்….. நாங்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த தடகள போட்டியில் கலந்து கொள்ள கடும் சிரமத்திற்கு பிறகு கலந்த கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்.

தமிழக அரசு எங்களுக்கு உரிய உதவி செய்தால் நாங்கள் மேலும் சாதனை படைப்போம், எங்களது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *