Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் – திருச்சியில் ஒத்திகை நிகழ்ச்சி!!

Advertisement

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே வருகின்றன.

Advertisement

திருச்சி மாநகர காவல் துறையினர் சார்பாக 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி தினம்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் திருச்சி மாநகர காவல் துறையினர் மற்றும் திருச்சி தீயணைப்பு துறையினர் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

Advertisement

சாலைகளில் செல்லும் ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்ய வேண்டும் என திருச்சி தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் வேதரத்தினம் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *