விவசாயியை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். விவசாயியான இவர் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக காரில் வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய 4 பேரையும் பிடித்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த வசந்தகுமார், மாரிமுத்து, திருச்சி திருவானைக்கோவிலைச் சேர்ந்த தினேஷ்,
சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வையம்பட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision