கொரோனா தொற்று எதிரொலி-நான்கு மண்டலங்களில் காய்ச்சல் முகாம் அமைத்த திருச்சி மாநகராட்சி

கொரோனா தொற்று எதிரொலி-நான்கு மண்டலங்களில் காய்ச்சல் முகாம் அமைத்த திருச்சி மாநகராட்சி

கடந்த சில நாட்களாக கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மாநகராட்சி ஆங்காங்கே காய்ச்சல் முகாம்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது . ஏற்கனவே  நடைமுறையில் இருந்ததை குறுகி சில காலங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தற்போது அந்த முகாம்களை தொடர்ந்து நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


  நான்கு மண்டலங்களில்   கிட்டத்தட்ட 24 இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த முகாம்கள் நடைபெறும்.
மார்ச் 20- 2021 வரைக்கும் நான்கு மண்டலங்களில் இந்த முகாம்களை நடக்க உள்ளன .
பண்டமங்கலம், கீரக்கொல்லை,அடையவளஞ்சான்,  விரகுப்பேட்டை, அரியமங்கலம் பெரியார் நகர் மற்றும் ஆழ்வார்தோப்பு ஆகிய பகுதிகள் பொதுமக்களிடம்  பரிசோதித்து அறிகுறி இருக்கிறவர்களை  பாதுகாப்பாக தனிமைப்படுத்துவும்  மேலும் தேவைப்பட்டால் மக்களின் சோதனை மாதிரிகளை ஆர்டிபிசிஆர் RT-pcr சோதனைக்காக சேகரிக்கவும்   மாநகராட்சி முடிவு செய்துள்ளது .
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள முகாம்களின் சரியான இடங்களை அறிய திருச்சி மாநகராட்சி  உதவிஎண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.  ஸ்ரீரங்கம் மண்டலம்- 76395 11000, அரியமங்கலம் மண்டலம்- 76395 22000, பொன்மலை மண்டலம்- 76395 33000, கே அபிஷேகபுரம் மண்டலம்- 76395 44000.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU