Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. ரயில்வே போதை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பாதுகாப்பு படையினர் வாசுதேவன், ராஜ்குமார், விஜயகாந்த், காளிமுத்து, செல்வராஜ், சாமிநாதன் உள்ளிட்ட குழு நடத்திய சோதனையில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகம் படும்படியாக பை ஒன்று இருந்துள்ளது.

இதையடுத்து அதில் பயணம் செய்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடிசா பலக்கியா கந்தல்மால் மாவட்டம் பரகாமா கிராமத்தை சேர்ந்த மிலப் நாயக் (37) என்பது தெரிய வந்தது. அதன்பின் அந்த பையை  சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சாவும், 2.6 கிலோ பவுடர் கலந்த கஞ்சாவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 32 ஆயிரம் ரூபா இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *