Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

41 நபர்க்ளுக்கு ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், 67 நபர்களை கௌவுரவித்து சுழல் கேடயம் வழங்கிய மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர்வே.சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் முன்னிலையில் இன்று (26.01.2025) தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 41 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். இம்மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் வார்டு குழு அலுவலகம், நகர் நல மையம் அலுவலர்கள் மற்றும், உதவிஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் , பணியாளர்கள் உள்ளிட்ட 67 நபர்களை கௌவுரவித்து பாராட்டி சான்றிதழ் மற்றும் சுழல் கேடயம் மேயர் அன்பழகன் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக சிறந்த முறையில் பணியாற்றியமைக்கும் மற்றும் ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமையப்பெற்ற நிலத்தினை கையகப்படுத்த தேவையான வருவாய் ஆவணங்கள் சேகரித்து விரைவில் சமர்ப்பித்தமைக்காவும்,

உதவி ஆணையர் மெ.த.சாலைதவவளன், அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலின் கைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவினை 21 நாட்கள் வார்டுக்குழு அலுவலகங்களில் உட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணி, குடிநீர் பணி, தெரு விளக்கு பணி மற்றும் சாலை பணிகளை பராமரித்து இவ்விழா சிறப்பாக நடைபெற மேற்கொண்ட சிறப்பான பணியினைப் பாராட்டினார்.

 உதவி ஆணையர், க.ஜெயபாரதி மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துரிதமாகவும், மேலும், சம்மந்தப்பட்ட மனுக்களுக்குரிய கோரிக்கைகளை சிறப்பாக நிறைவேற்றியதற்கான பணியினைப் பாராட்டி உதவி ஆணையர், வீ.சரவணன் ஆகியோருக்கும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சியில் சிறப்பாக தூய்மைப் பணிகள் நடைபெறுவதற்கு உறுதுணையாக தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் கொசுப்புழு வளர்வதற்கு ஏதுவாக உள்ள ஆதாரங்களைக் கண்டறிதல், அழித்தல் & விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் தூய்மைப் பணியாளர் (டெங்குகொசு புழு ஒழிப்பு) என்பவரின் சேவையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மேயர் அன்பழகன் வழங்கினார். பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மேயர் அன்பழகன், காந்திமார்கெட் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

       

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளில் துணை ஆணையர் க.பாலு, நகரப்பொறியாளர் ப.சிவபாதம், நகர் நல அலுவலர் விஜய் சந்திரன், மண்டலத்தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பு.ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் கே.எஸ்.பாலசுப்ரமணியன், மா.செல்வராஜ் உதவிஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_visio

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *