Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கூலி வேலை பார்த்த வட மாநிலத்தவரிடம் 6 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி சமயபுரம் பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவரிடம் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பாக்கெட்களை சமயபுரம் போலீஸார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

கைதான அவர்  உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பரதேசி மகன் கரபத்து வயது (45) என்பதும், அவர்  ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சமயபுரம் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் ராமராஜன்  என்பவரது எனத் தெரியவந்தது.

கரபத்து ராமராஜன் ஹோட்டலில் தினசரி சாப்பிடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த பழக்கத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கட்டட வேலை செய்து வரும் தனது வடமாநில நண்பர்களுக்கு சாப்பிட  டிபன் கொடுத்து வருகிறேன் என கூறிவிட்டு ஹோட்டல் உரிமையாளர் ராமராஜனிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanOll

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *