தனியார் கல்லூரி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை அடித்து கொள்ளை சம்பவம்- 9 பேர் கூண்டோடு கைது

தனியார்  கல்லூரி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை அடித்து கொள்ளை சம்பவம்-  9 பேர் கூண்டோடு கைது

சமயபுரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை அடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட கும்பலை கூண்டோடு கைது. திருச்சி மாவட்ட எஸ் பி அதிரடி நடவடிக்கை.

சமயபுரம் அருகே இயங்கி வரும்  தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேபோல் வெளி மாவட்ட மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பட்டய படிப்பு படித்து வருகின்றனர் .இந்நிலையில் மே 17 ம் தேதி இரவு மூன்று இருசக்கர வாகனங்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென  மாணவர்கள் தங்கி  இருக்கும் இரண்டு அறைகளின் கதவை  அடித்து உடைத்துள்ளனர்.

அப்போது அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பயத்தில் கூச்சலிடவே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மாணவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.இந்த சம்பவத்தை பார்த்த அருகில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் தங்களது அறையை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மாணவர்களை மண்டியிட வைத்த மர்ம நபர்கள் அவர்களின் உடைமைகள் வைத்திருந்த பெட்டிகளை ஆய்வு செய்து அதில் இருந்த தங்க செயின், வெள்ளி செயின், பணம் மற்றும் மாணவர்களிடம் இருந்து 12 செல்போன்களை பறித்துக்கொண்ட அந்த 9 பேர் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தில் கத்தியால் படுகாயமடைந்த வினோத், சந்தோஷ் ஆகிய இரண்டு மாணவர்களை சக மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினம் லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படை போலீசார் அமைத்து கல்லூரி விடுதியில் புகுந்து மாணவர்களை அடித்து அவர்களின் உடமைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை விரைவில் கைது செய்ய உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து லால்குடி டிஎஸ்பி மேற்பார்வையில் சமயபுரம் பொறுப்பு ஆய்வாளர் கருணகரன் மற்றும் சிறுகனூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட இரண்டு தனிப்படை போலீசார் அமைத்து பல்வேறு இடங்களில் மர்ம குமபலை தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்கள் இனாம் சமயபுரம் அருகிலுள்ள பகுதியில் ஒரு அறையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்து.அதனைத்தொடர்ந்து நேற்று மே 22 தேதி தனிப்படை போலீசார் இனாம் சமயபுரம் பகுதியில் அங்கு சென்று முகாமிட்டு கண்காணித்ததில் குற்றவாளிகள் பதுங்கி இருந்தது உறுதி செய்தனர்.இதையடுத்து அந்த அறையை சுற்றி வளைத்த போலீசார் பதுங்கி இருந்த 10 நபர்களை பிடித்தனர். அப்போது அதில் இருந்த ஒரு நபர் போலீசாரிடமிருந்து ஒப்பி ஓடினர்.

அவரை தொடர்ந்து சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் போலீசாரிடம் பிடிபட்ட 9 நபர்களை சமயபுரம் காவல்நிலையம் அழைத்து வந்த விசாரணை நடத்தினர்.விசாரணையில் திருச்சி சேர்ந்த 8 நபர்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் என்பது தெரியவந்தது. இதில் திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (16),தமிழ்ச்செல்வம் (17),சரண் (19),முருகன் (19),தங்கமுத்து (19),தனுஷ் குமார் (16),ரங்கசாமி (19),ஜாஹித் உசேன் (17),நடராஜ் (19) விசாரணையில் தெரியவந்தது.மேலும் ஆதிசங்கரர் பாலிடெக்னிக் கல்லூரியில்

 மாணவர் விடுதியில் மாணவர்களை மிரட்டி பணம் செல் போன் லேப்டாப் ஆகியோர்களை பறித்து சென்றது தெரியவந்தது.இதையடுத்து அவர்களிடம் உள்ள மாணவர்களின் 13 செல்போன்கள்,ரூ 2300 பணம் மற்றும் பொருட்களையும் மீட்டனர்.தொடர்ந்து இச்சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனர்.இந்த 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதித்துறை நடுவர் என் 3 ல் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision