நகை பட்டறையில் 950 கிராம் நகை கொள்ளை

நகை பட்டறையில் 950 கிராம் நகை கொள்ளை

திருச்சி பெரிய கடை வீதி,சந்துக்கடை அருகே சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில்,ஜோசப் என்பவர் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் பழைய நகைகளை வாங்கி உருக்கி மூக்குத்திகளாக செய்து பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து பட்டறையை மூடிவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்று விட்டு இன்று (26.04.2023) காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 950 கிராம் நகைகள்,ரூ1.5 லட்சம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் துணை ஆணையர் அன்பு மற்றும் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பழைய குற்றவாளிகள் இருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்ளை போன நகைகள், வெள்ளி பொருட்கள் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn