Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ஏட்டு வாகனத்தை காவல் நிலையத்திலிருந்தே அசால்டாக ஆட்டைய போட்ட நபர்

திருச்சி கன்டோன்மென்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிபவர் கோவிந்தராஜ் .இவர் பணிக்கு இரண்டு சக்கர வாகனம்  (புல்லட்டில்) வருவது வழக்கம் . கடந்த 21ம் தேதி அவர் பணியில் நிலையத்தில் இருக்கும் பொழுதுகாவல் நிலையத்துக்கு உள்ளே நிறுத்தி வைத்திருந்த புல்லட் வாகனத்தை அசால்ட்டாக ஒருவர் இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளி கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி  சிசிடிவியில் பதிவாகிய உள்ளது.

தொடர்ந்து போலீசார் இந்த நபரை தேடி வருகின்றனர். முக்கியமாக இந்த காவலர் வாகனம் காணாமல் போனது குறித்து இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும் காவல் நிலையத்தில் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமராவும் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சிகள் பதிவாகி இருந்தது காவல் நிலையத்தில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு கண்காணிப்பு கேமராவில் தான் பட்டபகலில் ஒருவர் லுங்கி அணிந்துக்கொண்டு  சர்வ சாதாரணமாக புல்லட்டை தள்ளிக் கொண்டு செல்வது தெரிகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *