Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் முதலைகள் ஓய்வு – பொதுமக்கள் அச்சம்

தற்போது தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை உய்யகொண்டான் வாய்க்காலை அமைந்திருக்கும் குழுமாயி அம்மன் கோயில் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநகரின் சில பகுதிகள் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது.

கரூர் – திருச்சி மாவட்டம் முசிறி போன்ற பகுதிகளில் பெய்த கனமழையின் தாக்கம் காரணமாக உய்யங்கொண்டான் வாய்க்கால் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் அப்பகுதியில் அமைந்திருக்கும் குமரன் நகர், வயலூர் ரோடு, உரையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

நான்கு நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் மழை நீர் சூழ்ந்த நிலையில் அவதியுற்று வருகின்றனர். மேலும் இவர்களுக்கு புதிய ஒரு அச்சமும் ஏற்பட்டுள்ளது. உய்யகொண்டான் வாய்க்கால் கிராம பகுதிகள் மற்றும் முட்புதர் நிறைந்த பகுதிகளை கடந்து நகர் பகுதிக்கு வருகிறது. தொடர்ந்து மழை நீர் வாய்க்காலில் சென்று கொண்டிருப்பதால் முதலைகள் கரைக்கு ஒதுங்கி விடுகின்றது. காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் பொழுது முதலைகள் கரையில் ஒதுங்கி படுத்து இருக்கும் காட்சியை காண முடிகிறது என்றனர்.

குறிப்பாக எட்டரை முள்ளிகரும்பூர் பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் பொது மக்களின் கண்களில் முதலைகள் அடிக்கடி தென்படுகிறது. அப்பொழுது அவ்வழியே சென்ற ஒருவர் தன்னுடைய கைபேசியில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் வந்து படுத்திருக்கும் முதலையை காட்சியாக பதிவு செய்துள்ளார். ஏற்கனவே முதலைகள் உய்யக்கொண்டான் வாய்க்கால் அதிகமாக உள்ளதால் அவ்வப்போது தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தூ பிடித்துச் செல்வது அரங்கேறி வந்தது. இந்த நிலையில் தற்போது மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முதலைகள் கரைக்கு வந்து ஒதுங்கி விடுகின்றது.ஏற்கனவே மாவட்ட நிர்வாகமும் தீயணைப்புத் துறையினரும் பொதுமக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் கரைகளில் நடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

தற்பொழுது முதலைகளை உடனடியாக பிடிக்க வேண்டுமென உய்யகொண்டான் கரையோரத்திலுள்ள கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *