Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி நீதிமன்ற வாயிலுக்கு முன்னதாக நடுரோட்டில் ஒருவர் தீக்குளிப்பு

திருச்சி நீதிமன்றம் வாயிலுக்கு முன்னதாக நடுரோட்டில் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவர்மீது பரவிய தீயை அணைக்க மணல் எடுத்து வீசினர். உடல் பாதி எரிந்த நிலையில் பொதுமக்கள் அவரை திட்டினர். கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி உள்ளனர் .

முதற்கட்ட தகவலாக அவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தீ வைத்து எரிந்த போது  அருகிலிருந்த ஒரு மரமும் கருகி உள்ளது.நீதிமன்ற வாயிலுக்கு முன்னதாக பட்டப்பகலில் திடீரென ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பயத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *