Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுரையின்படி திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.

மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் வருகிற 27.07.2022 ஆம் தேதியன்று மண்டலம் எண் : 1 – ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது மண்டல அலுவலகத்தில் உட்பட்ட 13-வார்டு பகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக குறைதீர் முகாமில் கொடுத்து பயன்பெறலாம்.

ஆகஸ்ட் – 30ஆம் தேதி மண்டலம் எண் : 2 அரியமங்கலம் கூட அலுவலகத்திலும்,

செப்டம்பர் 28ஆம் தேதி மண்டலம் எண் : 3 – திருவரம்பூர் ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்திலும்,

அக்டோபர் – 26ஆம் தேதி மண்டலம் எண் : 4 – பொன்மலை கோட்ட அலுவலகத்திலும்,

நவம்பர் – 30ஆம் தேதி மண்டலம் எண் : 5 கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது. 

எனவே அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *