Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி விமான நிலைய பிளன்சி பணி ஓய்வு

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மோப்பநாய் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்த பிளன்சி என்ற மோப்பநாய் நேற்றுடன் பணி நிறைவு அளிக்கப்பட்டது.

இதையொட்டி பணி நிறைவு நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆணையர் ஹர்சிங் நயால் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக மோப்ப நாய் பிரிவு போலீசார் பிளன்சியை நான்கு சக்கர வாகனத்தின் மேலே அமர்த்தி அதற்கு மாலை அணிவித்து வாகனத்தின் இருபுறமும் கயிறுகளால் இணைத்து விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் மோப்ப நாய் பிளன்சிக்கு சான்றிதழ் கேடயம் வழங்கி அதற்கு பணி ஓய்வு வழங்கி அனுப்பி வைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *