Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

இராம்ஜிநகர் காவல் நிலைய வளாகத்தில் நாளை (16.06.2023) பரிசு அளிப்பு விழா

திருச்சி மாவட்டம் இராம்ஜிநகர் காவல் நிலையம் 33 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக கடந்த (04.04.2023)ஆம் தேதி முதல்

(10.04.2023) ஆம் தேதி வரை கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் கபாடி போட்டிகள் நடத்தப்பட்டன. காவல் துறையில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத சூழ்நிலையினாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்றதால் மேற்படி போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர் அதிகபடியாக கலந்துக்கொண்டு

பரிசு பெற்றுள்ளதால் நேடியாக பரிசு வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு பரிசு அளிப்பு விழா தேதிகள் குறிப்பிடபடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. தற்போது பரிசு அளிப்பு விழாவானது (16.06.2023) ஆம் தேதி மாலை 05:00 மணிக்கு இராம்ஜிநகர் காவல் நிலைய வளாகத்தில் திருச்சி மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது.

அதனால் மேற்படி போட்டிகளில் கலந்துக் கொண்டவர்கள் மற்றும் பொது மக்கள் தவறாமல் விழாவில் கலந்துக்கொண்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றினை பெற்று விழாவை சிறப்பித்து தருமாறு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *