Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்டத்தில் நாளை (25.07.2023) முதல் (28.07.2023) வரை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் மின் பாதையில் உள்ள பகிர்மானங்களில் நாளை (25.07.2023) (செவ்வாய்க்கிழமை) முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் கல்லக்குடி, வடுகர்பேட்டை, கோவாண்டகுறிச்சி, புதூர் பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், குலமாணிக்கம், நத்தம், வந்தலைகூடலூர், குமுளூர், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, கண்ணாக்குடி, குளக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (26.07.2023) (புதன்கிழமை) பளிங்காநத்தம், வெங்கடாசலபு ரம், செம்பரை, திண்ணியம், அரியூர், செங்கரையூர், கோமாக்குடி, முதுவத்தூர் ஆகிய பகுதிகளிலும்,

(27.07.2023)-ந் தேதி வடுகர்பேட்டை, ஆலம்பாக்கம் மற்றும் செங்கரையூர், நத்தம், புள்ளம்பாடி, தாப்பாய், அலுந்தலைப்பூர் குடிநீரேற்று நிலையங்கள் பகுதியிலும்,

(28.07.2023)-ந் தேதி கல்லக்குடி, மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர் ஆகிய கிராமங்களிலும் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *