Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

அசத்தல் அஞ்சலக திட்டம், 50 ரூபாய் முதலீட்டில் 35 லட்சம் ரூபாய் !!

வாடிக்கையாளர்களுக்காக தபால் துறை மூலம் பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும். அத்தகைய அரசாங்கத் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா நீங்கள் அரசாங்கத்திடமிருந்து முழுத்தொகையான ரூபாய் 35 லட்சத்தைப் பெறுவீர்கள். நீங்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் பணக்காரர் ஆக விரும்பினால், இந்த தபால் அலுவலக திட்டம் மிகவும் சிறப்பானதாக உங்களுக்கு இருக்கும். தபால் அலுவலகம் மற்றும் வங்கி FD இன்னும் முதலீட்டுக்கான சிறந்த தேர்வாகக் இன்றுவரை கருதப்படுகிறது.

அஞ்சல் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தின் பெயர் கிராம் சுரக்ஷா, நீங்கள் அரசிடம் இருந்து ரூபாய் 35 லட்சம் பெறுவீர்கள். இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்காக தபால் நிலையத்தால் தொடங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு திட்டம். இதில் ரிஸ்க் இல்லாமல் நல்ல வருமானத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் 1500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

ரூபாய் 35 லட்சம் லாபம் எப்படி கிடைக்கும் ?

இந்த திட்டத்தில் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்தால், வரும் காலத்தில் ரூபாய் 31 லட்சம் முதல் ரூபாய் 35 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இதற்கு, உங்களுக்கு 19 வயதாக இருக்கும் பொழுதிலிருந்து முதலீடு செய்யத் தொடங்கி, 10 லட்ச ரூபாய் பாலிசியை வாங்கி, அதில் 55 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யுங்கள், அதில் உங்கள் மாத முதலீடு 1515 ரூபாய் 31.60 லட்சம். இதற்குப் பிறகு, 58 ஆண்டுகளுக்கு ரூபாய் 1,463 வீதம் ரூபாய் 33.40 லட்சத்தையும், 60 ஆண்டுகளுக்கு ரூபாய் 1, 411 வீதம் ரூபாய் 34.60 லட்சத்தையும் முதலீடு செய்யுங்கள்.

19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவொரு குடிமகனும் இந்த அஞ்சல் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை இருக்கலாம். இந்தத் திட்டத்தின் பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர அடிப்படையில் நீங்கள் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் பிரீமியத்தைச் செலுத்த உங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் கடனும் பெறலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டைத் தொடங்கிய பிறகு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் சரண்டர் செய்யலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *