Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

17 வயது சிறுமியை காரில் சீரழித்த நான்கு திருச்சி போலீஸ் கைது

கடந்த (01.10. 2023) ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லணை பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் 17 வயது சிறுமி திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு வந்துள்ளார். அங்கே அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது எதிர் பகுதியில் நான்கு பேர் காரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்டோர் இந்த ஆண் நண்பரை பார்த்து போதைப் பொருள் எதுவும் வைத்து இருக்கிறாயா என்று கேட்டு மிரட்டி அனுப்பிவிட்டு இந்த 17 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்து வந்து காருக்குள் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரம் அந்த சிறுமி கதறி உள்ளார். திரைப்படத்தில் வருவது போல் சிறுமி தப்பித்து ஓடியும், மீண்டும் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளி உள்ளே பாலியல் சீண்டலில் 4 பேரும் ஈடுபட்டுள்ளனர்.

இதை அடுத்து சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார் சம்பவம் நடந்தது உண்மை என்று விசாரணையில் தெரியவந்தது.

இதுக்குறித்த புகாரின் பேரில் முசிறி திருவரம்பூர் சேர்ந்த காவல் சரகத்தை சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் கூடுதலாக விசாரணை நடத்தி வந்தனர். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஏற்கனவே கூறிவிட்டார். 

1. சசிக்குமார் – உதவி ஆய்வாளர் (ஜீயபுரம்) 

2.பிரசாந்த் – (நவல்பட்டு காவல்நிலையம்)

3.சங்கர் ராஜபாண்டி (திருவரம்பூர் காவல்நிலையம்) 

4. சித்தார்த் – (ஜீயபுரம் காவல் நிலையம்) 

நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி பகலவன், உதவி ஆய்வாளர் சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மீதமுள்ள மூன்று போலீசாரை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உதவி ஆய்வாளர் சசிகுமார் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை பணியாற்றுபவர் அவர் கூறும் ரகசிய ரெய்டுகளை முன்னதாக சம்மந்தப்பட்டவர்கள் கூறி அவர்களிடம் மாமுல் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தாக கூறுகின்றனர். இது தொடர்பாக எஸ்.பிக்கு புகார் வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *