திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் விவசாய சங்க தலைவராக கிளியூரை சேர்ந்த சங்கிலிமுத்து இருந்து வந்தார்.இவர் திருவெறும்பூர் பகுதியில் பல்வேறு விவசாய பிரச்சனைகள் சம்பந்தமாக மாவட்ட மற்றும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டு அப்பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வந்தார்.

இதனால் சங்கிலி முத்துவுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் நன்மதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் சங்கிலி முத்து தற்பொழுது உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் உள்ளார். இதை கேள்விப்பட்ட திருச்சி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராசாமணி அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision






Comments